சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி கடுமையாக விமர்சித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பிரதமர் மோடி நாட்டின் புதிய அதிபராகவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏதேனும் சில மாநிலங்களில் பெரும்பான்மை இல்லை என்றால் அங்கு அடுத்த தேர்தல் வரும் வரை ஜனாதிபதி தேர்தலை அமல்படுத்துவார்கள். இப்படியே தொடர்ந்து பிரதமர் என்பதை தாண்டி நாட்டின் அதிபராக இருக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். ஆதரவு தெரிவித்த அதிமுக பலிகாடா ஆகப்போகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.