பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரி தொடர்புடைய இடங்களில் நவம்பர் 20 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.