ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையே நிலவியதாகக் கூறப்பட்ட ஒரு பரபரப்பான சூழல், தற்போது ஒரு நகைச்சுவையான வீடியோ மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் முன்னதாக இவர்கள் இருவருக்கும் இடையே மைதானத்தில் ஏதோ ஒரு வாக்குவாதம் அல்லது மனக்கசப்பு ஏற்பட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அந்த “டென்ஷன்” தருணத்தை மீண்டும் ஒருமுறை வேடிக்கையாகச் செய்து காட்டி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Surya Kumar Yadav (SKY) (@surya_14kumar)

“>

இதனால் தங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதையும், தாங்கள் நல்ல நண்பர்களாகவே இருப்பதையும் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்திய அணி வீரர்களிடையே நல்ல புரிதலும் ஒற்றுமையும் இருப்பதை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு முக்கியமான போட்டிக்கு முன்னதாக வீரர்களிடம் காணப்படும் இந்த நேர்மறையான அணுகுமுறை அணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் “எல்லாம் நலமே” என்ற செய்தியை சூர்யகுமார் மற்றும் குல்தீப் ஜோடி தங்களது பாணியில் மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளது.