உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை 11, 2023 வரை மட்டுமே இரண்டு முறை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு 17.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் மாதத்தில் மட்டுமே வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் 15.29 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுடைய சம்பள விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்வதற்கு மே 31 2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.