மேற்கு வங்க அமைச்சரும் முன்னாள் வங்காள நடிகருமான பாபுல் சுப்ரியோவுக்கு திங்கள்கிழமை அன்று  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவருக்கு சிறிய கரோனரி தமனி நோய் இருப்பது தெரியவந்தது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.