மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரத்தில் உள்ள ஹோட்டல் செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு கன்டெய்னர் திடீரென தீப்பிடித்ததால், நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய போக்குவரத்து நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் வாகனங்கள் நகர முடியாமல் பரிதவித்தன.
தீ விபத்து நேரத்தில் மேம்பாலத்தில் கரும்புகை எழுந்ததையும், கன்டெய்னரை முழுவதும் தீ பற்றியதையும் அங்கிருந்த மக்கள் பார்த்து திகைத்தனர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | #Thane: Container Catches Fire On Patlipada Flyover On Ghodbunder Road Towards Hotel Fountain#ThaneNews #Maharashtra pic.twitter.com/V2CpXX2v20
— Free Press Journal (@fpjindia) August 4, 2025
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் பொதுமக்கள் அந்த வழியைத் தவிர்த்து, மாற்றுவழிகள் வழியாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும் வரை பொறுமையாக இருக்குமாறும், போக்குவரத்துத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
