பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா கில் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரக்பீர் சிங். இவருடைய மகன் ரஜ்பீர் சிங் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறான். நடனத்தின் மீது கொள்ளை பிரியம் கொண்ட சிறுவன் ரஜ்பீர் முறையாக நடனம் கற்று வருகிறான். இந்த நிலையில் லூதியானாவிலுள்ள இஷ்மித் நடன அகாடமி சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ரஜ்பீர் சிங்கை அவரது தந்தை அழைத்துச்சென்றார். அங்கு மேடையேறிய ரஜ்பீர், தன் துள்ளல் நடனத்தால் பார்வையாளர்களை கவர்ந்தார்.

அவரது ஒவ்வொரு நடன அசைவையும் ரசித்தவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இதற்கிடையே மகனின் நடனத்தை செல்போனில் படம்பிடித்த ரக்பீர், அதனை சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் அந்த வீடியோவை நடிகை சோனம் பஜ்வா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இதுபற்றி சிறுவன் ரஜ்பீர் கூறியதாவது “கடந்த 2 வருடங்களாக நடனம் கற்று வருகிறேன். ஹிப்-ஹாப் நடனத்திற்காக தினசரி 2  மணிநேரம் ஒதுக்குகிறேன்” என கூறினார்.