நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். என்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்றாவது கணவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்வேன் என்று கூறினார். அமைச்சரின் மனைவி கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.