முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு கண்டனத்திற்குரியது. எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்று கூறினார்.

அதாவது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அரசு பள்ளிகளை சீரமைக்க நிதியில்லை கடலுக்குள் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு மட்டும் நிதி இருக்குமா என்று கேள்வி எழுப்பினர். அதோடு உங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு. நீ பேனாவை வை. நான் வந்து ஒரு நாள் உடைப்பேன் என்று ஆவேசமாக கூறியிருந்தார். மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.