சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் ஐந்து ரூபாய்க்கு பயணிக்கலாம் என்ற சலுகை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சலுகை டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைமுறைப்படுத்த இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் டிசம்பர் 3ஆம் தேதி மட்டும் ஐந்து ரூபாய்க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இது மேலும் டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை மற்றும் புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.