விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 16 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களும் மற்றும் ஒரு வயது மகனும் உள்ளனர். ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

இந்த துக்கத்தை தாங்க முடியாத பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் அவருக்கு சொந்தமான வயதில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு சடலங்களை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.