தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்த மூத்த நடிகரான சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகர் சரத்பாபு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவர் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, புதியகீதை, அருள், பேரரசு, சிங்கம் 3, வசந்தமுல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, ஆந்திர மாநில நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.