மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப்(68) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக codb தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.