கர்நாடக மாநிலம் கொப்பல் நகரம் பாக்யா நகரில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வரும் கிரிஜாம்மா (80)என்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இரண்டு மின்விளக்குகளை தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் இருந்தும் இப்படி ஒரு பில் வந்ததால் மூதாட்டி செய்வது அறியாமல் அதிர்ச்சி அடைந்தார். மாதந்தோறும் சரியாக 70 முதல் 80 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் மீட்டர் ரீடிங்கில் தவறு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.