நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளானது கிடைக்கும்.

ரயில்வே தரப்பிலிருந்து தகவல் அளிக்கையில், தினசரி சுமார் 10,000 ரயில்கள் ரயில்வே துறை வாயிலாக இயக்கப்படுவதாகவும், அதில் மூத்தக்குடிமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ரயில்வேயிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஸ்லீப்பர் பிரிவில் மூத்தக்குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 6 கீழ் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு 3-ம் வகுப்பு ஏசியிலுள்ள ஒவ்வொரு பெட்டியிலும் 4 முதல் 5 கீழ் பெர்த்களும், 2-ம் வகுப்பு ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் 3 முதல் 4 கீழ் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.