சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை ஹரியானாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தேர்தலுக்காக பாஜகவின் கொடிகள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவை லாரியில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய அனுமதியின்றி கொடிகள் மற்றும் தொப்பிகளை கொண்டு வந்த லாரியின் ஓட்டுநர், உரிமையாளர், அதனை அனுப்பி வைத்த நபர்கள் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.