காட்டின் மாபெரும் விலங்கான யானை, உண்மையில் காட்டின் “சிங்கம்” என சொல்லப்படுவது தவறில்லை. சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகள் கூட யானையின் வலிமைக்கு இணையாக இருக்க முடியாது; அவற்றைக் கண்டவுடனே அச்சத்தில் ஓடிவிடும்.

இப்படிப்பட்ட யானைகள் கோபமடைந்தால் என்ன நடக்கும் என்பதைக் காட்டும் ஒரு திகிலூட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், யானைக் கூட்டம் ஒன்றால் ஒரு வரிக்குதிரை தாக்கப்பட்ட காட்சி பதிவாகியுள்ளது.

 

வீடியோவில், ஒரு யானை தனது தும்பிக்கையால் வரிக்குதிரையைத் தாக்கி, தூக்கி கீழே வீசுகிறது. எழுந்திருக்க போராடும் வரிக்குதிரை மீது இன்னொரு யானை பாய்ந்து, தனது  உடலையும் வலிமையான தும்பிக்கையையும் பயன்படுத்தி தரையில் இறுக்குகிறது. தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்ட யானைகளை எதிர்கொள்வது அந்த வரிக்குதிரைக்கு இயலாத ஒன்றாக மாறுகிறது.

இந்த காட்சி காட்டில் விலங்குகளின் உண்மையான சக்தியையும், யானையின் கோபத்தின் அபாயகர தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த 12 விநாடிகள் கொண்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் @TheeDarkCircle என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை இது 41,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பயனர்கள் அதை லைக் செய்து கருத்து பகிர்ந்துள்ளனர்.

சிலர், “இது காட்டின் உண்மையான சக்தி — இயற்கையின் இயல்பான நிகழ்வு” என கூறியிருக்கின்றனர்.

மற்றவர்கள், “வீடியோவில் சில காட்சிகள் தெளிவாக மாறுவதால் இது போலியாக இருக்கலாம்” என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பல பயனர்கள் “காட்டில் வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது; எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.