மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக 7 மலை சுங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதற்கு முதல் கட்டமாக குஜராத் மாநிலம் வால்சாட்டில் 350 மீட்டர் நீளத்திற்கு மலையை குடைந்து சுங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டத்தில் மொத்தம் சுமார் 21 கிலோ மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைய உள்ளது. இதில் தானே கழிமுகப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏழு கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் படிப்படியாக நிறைவடைந்த பிறகு விரைவில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.