முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987 முதல் 1993 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்தபோது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர் பணியவில்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரிடமும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர். இவருடைய உடலுக்கு தமிழக அரசு சார்பாக உதயசந்திரன் அஞ்சலி செலுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.