முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என்று வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தவேண்டிய திட்டங்கள் பற்றி ஆலோசித்தோம். அரசு பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றின் செயலாக்கத்தை கண்காணித்து வருகிறது என முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.