பாகிஸ்தான் நாட்டில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகின்றார். இந்நிலையில் மர்வியா மாலிக் மீது லாகூர் நகரில் வைத்து இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

இது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்கும் போது கூறியதாவது “எனக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இதற்கு பயந்து நான் சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்தேன். ஆனால் ஒரு அறுவை சிகிச்சைக்காக தற்போது லாகூர் வந்தேன். அப்போதுதான் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.