
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் மீதான விவாத கூட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளின் எம்பிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி இன்று காலை10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்ட அரங்கில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து எம்பிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் போன்றவைகள் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எம்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவார் என்று கூறப்படுகிறது.