மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில் தான் கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூறியது சரிதான் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பாஜகவிடம் நாங்களும் கூறியுள்ளோம். இபிஎஸ்ஐ மனதில் வைத்து தான் தமிழர் பிரதமராக வேண்டுமென அமித்ஷா கூறினார் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு அடுத்த தலைமுறை விஜய் தான், அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என்று கூறியுள்ளார். யார் யாரோ தங்களை பிரதமர் என்றும் முதல்வர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது விஜய் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?அவர் அரசியலுக்கு வருவதையும் வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.