சட்டவிரோத பணம் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் வெளிப்படத் தன்மை இல்லை என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கு செந்தில் பாலாஜிக்கு நேர விளையாட்டு அரங்கில் வைத்தா அறுவை சிகிச்சை நடத்த முடியும்? என்று ஆவேசமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், உடலை கிழித்து செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை பொய்யாக எப்படி செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.