தமிழகத்தில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது, மாநில நலனுக்காக உழைத்த இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நடப்பாண்டு விருது வழங்கும் விழாவானது ஆகஸ்ட் 15ஆம் தேதியான சுதந்திர தினத்தன்று நடத்தப்படும் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான  www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.in இதில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

கடந்த நிதி ஆண்டில் செய்த சேவைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மே 31ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருடம் தமிழகத்தில் குடியிருந்திருக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியள்ளார்.