ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிரவில் மணப்பெண்ணை கணவர் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கிலோரா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஜூன் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முதலிரவு அன்று அறைக்கு கணவர் தனது அண்ணனுடன் வருவதைப் பார்த்து மணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, சகோதரர்கள் இருவரும் மணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.