மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான மகேஷ் ஜேத்மலானி, மம்தா பானர்ஜி தானாக முன்வந்து பதவி விலகப் போவதில்லை என்றும், அவரை அப்பதவியிலிருந்து “வெளியேற்ற” வேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழலில், பொறுப்பில் உள்ளவர்கள் தார்மீகப் பொறுப்பேற்க மறுப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று அவர் விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மம்தா பானர்ஜி அரசு ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
#TheBuckStopsHere with @PadmajaJoshi
Mamata Banerjee should be taught a lesson, she’s a disgrace to the very concept of democracy and rule of law: Mahesh Jethmalani (@JethmalaniM), Senior Advocate, Supreme Court pic.twitter.com/bMQXpBGcop
— NDTV (@ndtv) May 5, 2026
“>
இந்த நிலையில், மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த பிடிவாதமான போக்கைக் கண்டித்துள்ள ஜேத்மலானி, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் தற்போதைய நிர்வாக அமைப்பில் மாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
