இந்திய பிரதமர் இன்று அரசு நிகழ்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகம் வருகை தர உள்ளார். இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அவர் வருவதை முன்னிட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை 4.30 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.