தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சமீபத்தில் எதுவும் போதிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு படத்தில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் மற்றும் இயக்குனர் சுந்தர் சி யின் பிறந்தநாள் விழா ஒரே நாளில் வந்த நிலையில், இருவரின் பிறந்த நாள் விழாவும் ஒரே நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் அடுத்த அடுத்த பாகங்களை சுந்தர் சி இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாகவும் அதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் சந்தானம் ஏகே 62 திரைப்படத்தில் காமெடி ரோலில்  நடிப்பதற்கு கம்மிட் ஆனதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அரண்மனை 4 திரைப்படத்திலும் காமெடி ரோலில் நடிப்பதற்கு கம்மிட்டானதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதனால் சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமின்றி காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.