கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையாளர் நிலையில் தற்போது 26 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தக்காளி விலை இரட்டை சதத்தை தொட்ட நிலையில் மீண்டும் அது போன்ற நிலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.