சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தற்போது புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜெகதீசன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.