மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 11.07.2023 அன்று காலை 9:30 மணி அளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு 11.0 7.1710 அன்று மகனாகப் பிறந்தார். தன் இளம் வயது முதல் சுதந்திர பற்று மிக்கவராக இருந்தார் மாவீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தார்..

இதன் விளைவாக மாவீரன் அழகுமுத்துக்கோன் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். நெல்லை சீமையில் உள்ள அனைத்து பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரி வசூலித்த ஆங்கிலேயர்கள் 1755 ஆம் ஆண்டு எட்டயபுரத்திற்கும் வரி கேட்டு ஓலை அனுப்பினர். இதனை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்று எட்டயபுர மன்னரிடம் மாவீரன் அழகுமுத்துக்கோன் கடுமையாக வாதிட்டார். இதன் விளைவாக எட்டயபுரம் மன்னரும் அழகு முத்து கோனின் உணர்வினை ஏற்றுக் கொண்டார். எட்டயபுரம் மன்னர் ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் 1756 ஆம் ஆண்டு கான்சாகிப் என்பவரை நெல்லைச் சீமைக்கு கமாண்டராக நியமித்தனர். கமாண்டர் கான்சாகிப்பின் பீரங்கி படையானது எட்டயபுரத்தை கடுமையாக தாக்கியதன் விளைவாக எட்டயபுரத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் வசமாக்கினர்.

எட்டயபுரத்தை மீட்டெடுக்க வீரன் அழகுமுத்துக்கோன் படை திரட்டி உரிய மாவேலி ஓடை, பெத்தநாயக்கனூர் பகுதியில் இருந்து வீரர்களுக்கு பெரும் போர் பயிற்சி அளித்து மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்பரும், விடுதலை வீரர் அழகுமுத்து கோனும் போரில் ஈடுபட்டனர்.. போரில் வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் படை இரவு நேரத்தில் உறக்கத்தில் இருந்த வீரன் அழகுமுத்துக்கோன் படையினரை தாக்கி 200க்கும் மேற்பட்ட வீரர்களை சிறை பிடித்தனர்.

வீரன் அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்டால் உயிர் பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்தனர். அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என்று கம்பீரமாக வீரன் அழகுமுத்துக்கோன் முழக்கமிட்டார்.

வீரன் அழகுமுத்துக்கோன் படையில் உள்ள 255 வீரர்களை நடுக்காட்டூர் சீமைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆங்கிலேயர்களால் கொடூரமாக தாக்கி சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவீரன் அழகுமுத்துக்கோன் உடன் இருந்த ஏழு வீரர்களையும் பீரங்கி வாயில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவத்தின் மூலம் விடுதலைக்கான தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்டது.

விடுதலைக்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை போற்றுகின்ற வகையில், நடைபெறும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்..

https://twitter.com/TNDIPRNEWS/status/1678376395041566720