தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மாவட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். தேர்வு கட்டணத்தை செலுத்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும் தபால் மற்றும் மின்னஞ்சல் போன்ற இதர வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.