மார்க் ஆண்டனி இந்தி பட தணிக்கை சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்புக்காக தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார். தணிக்கை சான்றிதழுக்கு ரூ 6.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக தணிக்கை அதிகாரிகள் மீது விஷால் புகார் அளித்தார். நடிகர் விஷால் அளித்த ஊழல் புகாரில் தணிக்கை அமைப்பின் அதிகாரிகள் 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து செய்தி விசாரணை நடத்தி வருகிறது. இடைத்தரகர்கள் என கருதப்படும் மெர்லின் மேனகா, ராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.