
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயண பேட், தன் வாடா பழங்குடியினர் குருகுல பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (15). இவர் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். மாரடைப்பால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.