மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 46 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இணையாக மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கு அகல விலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. அதன்படி இந்த வாரம் பஞ்சாப், மேகாலயா மற்றும் மேற்கு வங்கமாகிய மூன்று மாநில அரசுகளும் அகலவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன. மேற்கு வங்க மாநில முதல்வர் நான்கு சதவீத அகலவிலைப்படி உயர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக 200400 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவித்துள்ள நிலையில் மேகாலய அரசு மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்குவதாகவும் இதன் மூலம் 55 ஆயிரம் ஊழியர்கள் பயனடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் டிசம்பர் 18ஆம் தேதி நான்கு சதவீத அகலவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அதன் பிறகு 38 சதவீத அகலவிலைப்படி உயர்வை ஊழியர்கள் பெறுவார்கள் எனவும் உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.