இந்தியாவில் ஏழை எளிய விவசாயிகளின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இணையும் விவசாயிகள் இறக்கும்போது விவசாயியின் மனைவிக்கு ஓய்வூதியம் 1500 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு விவசாயிகள் கட்டாயம் ஆதார் கார்டு, மொபைல் எண், பாஸ்போர்ட் புகைப்படம், அடையாளச் சான்று, வருமானச் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலில் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று தங்களுடைய மொபைல் எண்ணை விவசாயிகள் பதிவு செய்து அதன் பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும். அதில் கேட்கப்படும் செயல்முறைகளை முடித்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் நீ உங்களுக்கு தகுதி இருந்தால் மாதம்தோறும் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.