ஹாங்காங் மாடல் அழகியை முன்னாள் கணவர் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மாடல் அழகியான அபி சோய் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் போ மாவட்டத்தில் கசாப்பு பிரிவில் அவரது உடல் பாகங்களை போலீசார் மீட்டனர். அவரது இரண்டு கால்களும் ஃப்ரிட்ஜில் காணப்பட்ட நிலையில் தலை, உடல் மற்றும் கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் அவரது முன்னாள் கணவர் அவரை கொலை செய்தது அம்பலமானது. இதை அடுத்து அவரது கணவர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கணவனின் தந்தை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னாள் கணவரிடம் இருந்த 52.81 கோடி ரூபாய் பணமும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாடல் அழகிக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் நடைபெற்ற சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.