ஹரியானாவில் இசை கலைஞரும் ஆடலுமான ஷீத்தல் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஷீத்தல் ஜூன் 14-ஆம் தேதி படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் ஷீத்தலின் சகோதரி நேஹா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷீத்தலை தேடி வந்தனர். அப்போது காண்டா கிராமத்திற்கு அருகே இருக்கும் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.