ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நட்டாஷா ஸ்டான்கோவிக் மற்றும் மகன் அகஸ்தியாவிற்கு விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரைப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை மஹிகா சர்மாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட சில நாட்களிலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹர்திக் மற்றும் நட்டாஷா தங்களது பிரிவை அறிவித்த பிறகு, மகன் அகஸ்தியாவின் நலனுக்காகத் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்ந்த கார் பரிசு, அவர்களுக்கிடையேயான சுமூகமான உறவையும், தந்தை என்ற முறையில் தனது மகன் மீது ஹர்திக் கொண்டுள்ள மாறாத அன்பையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
View this post on Instagram
“>
இந்தத் திடீர் பரிசு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மஹிகா சர்மாவின் பிறந்தநாளைத் தொடர்ந்து இந்தச் செய்தி வெளியானதால், இது தற்செயலான நிகழ்வா அல்லது இதற்குப் பின்னணியில் ஏதேனும் காரணம் உள்ளதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், கிரிக்கெட் மைதானத்தில் அதிரடி காட்டும் ஹர்திக் பாண்டியா, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிப்பது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது இந்த சொகுசு காரின் புகைப்படங்கள் மற்றும் ஹர்திக்கின் இந்த செயல் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
