மழைநீர் வடிகால் பணிகளுக்கு இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்களுக்கு செலவிட்ட தொகை தொடர்பான குற்றச்சாட்டுக்கு இன்று பதிலளித்த அவர், மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி என தெரிவித்தார்.

மீதமுள்ள 3000 கோடிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.