
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை சேர்வைக்காரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ரங்கசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன்கள் மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 2ஆம் தேதி முதல் ரங்கசாமியை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் மருத்துவமனை காவலாளியான கோவிந்தராஜ்(64) என்பவரை பிடித்து விசாரித்தனர். கோவிந்தராஜ் தனது மகன் வடிவேல் குமார், மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் பண்ணக்காரன் பட்டி தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஈஸ்வரிக்கும் கோவிந்தராஜுக்கும், இடையே தகாத உறவு ஏற்பட்டது.
இதற்கு இடையே கோவிந்தராஜன் ரங்கசாமியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதனால் ரங்கசாமி அடிக்கடி தோட்டத்து வீட்டுக்கு வந்து சென்றபோது ஈஸ்வரிக்கும், அவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ஈஸ்வரி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ரங்கசாமி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் கோபத்தில் கோவிந்தராஜ் ரங்கசாமியை தனது வீட்டிற்கு வரவழைத்து மருமகளுடனான கள்ளக்காதல் பற்றி பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ் தாக்கியதால் ரங்கசாமி உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை சாக்கு முட்டையில் கட்டி ஓடைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோவிந்தராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.