
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதம் நடைபெறும். அதன்படி இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் வறுமையிலும் பெரிய மதிப்பெண்களுடன் ஜெயித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. குடும்ப வறுமையில் 12ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்று உள்ளது. இவர்களின் பெற்றோர்கள் செய்யக்கூடிய வேலை அவர்கள் படும் கஷ்டங்கள், தனது ஆசிரியர்களின் உதவி என்று அனைத்தையும் அரங்கத்தில் மாணவர்கள் பேசியுள்ளனர்.
அதில் ஒரு மாணவர் தற்போது 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில் இவரது தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். ஆனால் அவர் படுக்கையில் கூறிய வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு அந்த மாணவர் இவ்வாறு படித்துள்ளது கோபிநாத்தை வியக்க வைத்துள்ளது.