பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற மன்னர் சார்லஸ் பிராஸ்டேட் சுரப்பிகாக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அது ப்ராஸ்டேட் புற்று நோய் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸுக்கு திங்கள்கிழமை முதல் வெளி நோயாளியாக சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.