சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்திற்கு சென்று கரையில் நின்றபடி மந்திரங்களை உச்சரித்து திடீரென்று தன்னுடைய நாக்கை அறுத்துக் கொண்டார்.

பிறகு ரத்தம் சொட்ட அவர் சிவன் கோவிலுக்கு சென்றதை பார்த்த சிலர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வாய் பேச முடியாத மனைவிக்கு பேச்சு வர வேண்டி கடவுளுக்கு தனது நாக்கை காணிக்கையாக கொடுக்க நிஷாத் இவ்வாறு செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.