கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியின் போது நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது.

தளபதி விஜய் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பொது இடத்தில் காலணி கழட்டி எறிந்தது சம்பந்தமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தென் சென்னை மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் தி நகரை சேர்ந்த க. அப்புனு என்பவரால் அளிக்கப்பட்டது.

அதில், வணக்கம்.. ஐயா நான் மேற்கொண்ட விலாசத்தில் வசித்து வருகின்றேன். நான் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் தென் சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றேன். கடந்த 28.12.2023 அன்று நடிகர் திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலனி கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள் மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.