பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகள் அடங்கிய பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், அதனை அதிகரிக்க முயர்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.