மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அகலவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏஐ சிபிஐ குறியீடு 139.18 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் 50% அகலவிலைப்படி அடிப்படையில் ஊழியர்களுக்கு பலன்கள் கிடைக்கும். இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் அதிரடி மாற்றம் நடைபெறும். அதாவது அடிப்படை சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் பெறும் ஊழியர்களுக்கு தற்போது அகலவிலைப்படி அடிப்படையில் எட்டாயிரம் ரூபாய் வரை உயர்வு கிடைக்கும்