மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் சாகாஸ் மகாராஜ் காடி வாலே பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பாபாவின் முன் ஊதுபத்திக்கு பதிலாக ‘சிகரெட்’ பற்றவைத்து புகைக்கிறார்கள். பின்னர் அவர்களின் விருப்பம் நிறைவேறிய பிறகு, பக்தர்கள் கடிகாரத்தை வாங்கி ஆலமரத்தில் கட்டிவிட்டு செல்வார்கள். இந்த காடி வாலே பாபா கோவிலில் கடவுளோ அல்லது பூசாரிகளோ இல்லை.

இந்த வழக்கத்தை யார் தொடங்கி வைத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இங்கு சுமார் 2000க்கு மேற்பட்ட கடிகாரங்கள் மரத்தில் கட்டப்பட்டுள்ளது. அமைதியான இரவு நேரங்களில் டிக் டிக் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமாம்.