நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு அகல விலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் வெளியீட்டு வருகிறது. வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை முதல் உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக இரண்டாவது உயர்வு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகல விலை படி வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை 46 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. புதிய அகல விலைப்படி விகிதங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் வரை ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகலவிலைப்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அகலவிலைப்படி உயர்வை உயர்த்தியவுடன் கூடுதலாக உயர்த்தப்பட்ட தொகை நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் இதன் மூலமாக 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.